search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்காட்லாந்து துவக்க வீரர் ஜார்ஜ் முன்சி
    X
    ஸ்காட்லாந்து துவக்க வீரர் ஜார்ஜ் முன்சி

    வங்கதேசம் அணியின் வெற்றிக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து

    முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு140 ரன்கள் எடுத்துள்ளது.
    அல் அமீரத்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. 

    முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன் அணி பப்புவா நியூ கினியா அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இரண்டாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு140 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்கள் அடித்தார். ஜார்ஜ் முன்சி 29 ரன்களும், மார்க் வாட் 22 ரன்களும் எடுத்தனர். 

    வங்கதேசம் தரப்பில் மஹதி ஹசன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஷாகிப் அல் ஹசன், முஸ்தாபிகுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது.
    Next Story
    ×