என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அபுதாபி அரங்கை அதிரவைத்த இசான் கிஷான், சூர்யகுமார்... 235 ரன்கள் குவித்தது மும்பை
Byமாலை மலர்8 Oct 2021 4:19 PM GMT (Updated: 8 Oct 2021 4:19 PM GMT)
பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக பறக்க விட்ட இசான் கிஷான், 32 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அசத்தினார்.
அபுதாபி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. மும்பை அணிக்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியமான ஆட்டமாகும். இதில் அதிக ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி, அதிரடியாக ஆடி 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக பறக்க விட்ட இசான் கிஷான், 32 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அசத்தினார். இதேபோல் சூர்யகுமார் யாதவும் மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.
ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட் வீழ்த்தினார். ரஷித் கான், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X