என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரீபியன் பிரீமியர் லீக் - சாம்பியன் பட்டம் வென்றது செயின்ட் கிட்ஸ் அணி
Byமாலை மலர்16 Sep 2021 10:15 PM GMT
சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
செயின்ட் கிட்ஸ்:
கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ்-செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ் தலா 43 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து ஆடிய செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்து முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கிறிஸ் கெய்ல் (0), இவின் லீவிஸ் (6 ரன்), கேப்டன் வெய்ன் பிராவோ (8 ரன்) சொதப்பினாலும், இளம் வீரர் டோமினிக் டிராக்ஸ் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடி கதாநாயகனாக ஜொலித்ததுடன் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இலக்கை கடக்க வைத்தார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினார். தொடர் நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X