என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி
Byமாலை மலர்6 Sep 2021 1:23 AM GMT (Updated: 6 Sep 2021 1:23 AM GMT)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டி, உலக தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் மோதினார்.
முதல் இரு செட்டுகளை இருவரும் தலா ஒன்று வீதம் வென்றனர். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் ஆரம்பத்தில் ஆஷ்லே பார்டி ஆதிக்கம் செலுத்தினார்.
ஆனால் ஆஷ்லே பார்டி அடுத்தடுத்து செய்த தவறுகளால் அந்த செட்டை 6-7 என கோட்டை விட்டார்.
இறுதியில், ஷெல்பி ரோஜர்ஸ் 6-2, 1-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆஷ்லே பார்டிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். நம்பர் ஒன் வீராங்கனை ஒருவரை 28 வயதான ஷெல்பி ரோஜர்ஸ் வீழ்த்தியதும் இதுவே முதல் தடவையாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X