என் மலர்
செய்திகள்

ஆஷ்லே பார்டி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லே பார்டி
சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும் ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லேவும் மோதுகின்றனர்.
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டியும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜில்டீச்மேனும் மோதினர்.
இதில் தொடக்கம் முதலே ஆஷ்லே பார்டி சிறப்பாக விளையாடினார். இதனால் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ஆஷ்லே பார்டி அதிரடி காட்டினார். இதனால் 6-1 என்ற கணக்கில் வென்றார்.
இறுதியில், ஆஷ்லே பார்டி 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
Next Story






