என் மலர்
செய்திகள்

சாய் கிஷோர்
டி.என்.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 104 ரன்கள் இலக்கு
சேப்பாக் அணியின் சாய் கிஷோர், அலெக்சாண்டர் உள்பட சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச திண்டுக்கல் டிராகன்ஸ் 103 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர்லீக் டி20 தொடரின் தகுதிச்சுற்று 2-ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர் விமல் குமார் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் ஒரு பக்கம் நிலைத்து நின்று ரன்கள் சேர்க்க, மறுமுனையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்களோடு வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. ஹரி நிஷாந்த் மட்டும் 46 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் 104 ரன்கள் அடித்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
Next Story






