என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் ‘தல’ டோனி: நாளை மறுதினம் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் சி.எஸ்.கே. வீரர்கள்
Byமாலை மலர்11 Aug 2021 12:15 PM GMT (Updated: 11 Aug 2021 1:04 PM GMT)
ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது பாதி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 9-ந்தேதி தொடங்கி மே 2-ந்தேதி வரை நடைபெற்றது. அதன்பின் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட, ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட மீதமுள்ள போட்டிகள் அடுத்த மாதம் 19-ந்தேதியில் இருந்து அக்டோபர் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் இங்கிலாந்து தொடர் முடிந்த உடன் அப்படியே ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிடுவார்கள்.
8 அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல வேண்டும். முன்னதாகவே சென்றால்தான் அங்குள்ள சீதோஷ்ணநிலைக்கு ஏற்றபடி அவர்களை மாற்றிக்கொண்டு சிறப்பாக விளையாட முடியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் டோனி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை மறுதினம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X