என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு 40 சதவீதம் அபராதம்: இரண்டு புள்ளிகள் குறைப்பு

    நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்றது.

    கடைசி நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நழுவிப் போனதுடன் போட்டி டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் இரண்டு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதனால் இரண்டு அணி வீரர்களுக்கும் தலா 40 சதவீதம் (சம்பளத்தில் இருந்து) அபராதம் விதித்த ஐசிசி, சாம்பியன்ஸ்டிராபி தொடருக்கான புள்ளிகளில் இரண்டை குறைத்துள்ளது.
    Next Story
    ×