என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு அணி கேப்டன்கள்
    X
    இரு அணி கேப்டன்கள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று இரவு தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக கவுசிக் காந்தி, ஜெகதீசன் களமிறங்கினர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி: கவுசிக் காந்தி (கேப்டன்), என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஜெகநாத் சீனிவாஸ், ராதாகிருஷ்ணன், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ராஜகோபால் சதீஷ், உத்திரசாமி சசிதேவ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், மணிமாறன் சித்தார்த், ஆர்.அலெக்சாண்டர்.

    திருச்சி ரூபி வாரியார்ஸ் அணி: சந்தோஷ் சிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அட்னன் கான், ஆதித்யா கணேஷ் (விக்கெட் கீப்பர்), ஆந்தோணி தாஸ், ஆகாஷ் சும்ரா, எம்.மதிவண்ணன், சரவண குமார், ரஹில் ஷா (கேப்டன்), சுனில் சாம்.
    Next Story
    ×