என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இங்கிலாந்தை வீழ்த்தி 41 வருடத்திற்குப்பின் அரையிறுதியில் இந்தியா
Byமாலை மலர்1 Aug 2021 1:46 PM GMT (Updated: 1 Aug 2021 1:46 PM GMT)
இங்கிலாந்துக்கு எதிராக மூன்று கால் பகுதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஹாக்கி அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா- கிரேட் பிரிட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
41 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்கினா். முதல் கால்பகுதி (15 நிமிடம்) ஆட்டம் தொடங்கியதும், ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும், 16-வது நிமிடத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இந்த முறை குர்ஜந்த் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர (30 நிமிடம்) ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
3-வது கால் பகுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் வீரர்களை கோல் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பான வகையில் தடுத்தனர். ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கிரேட் பிரிட்டனுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் வார்டு கோல் அடித்தார். இதனால் 3-வது கால் பகுதி (45 நிமிடம்) ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
4-வது கால் பகுதி ஆட்டத்தில் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என்று கிரேட் பிரிட்டன் விளையாடியது. அதேவேளையில் தடுப்பு ஆட்டத்துடன் மேலும் கோல் அடிக்கும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் விளையாடினர்.
ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் அடிக்க இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் கிரேட் பிரிட்டன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா ஆட்ட முடிவில் (60 நிமிடம்) 3-2 என வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X