search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபிகா குமாரி
    X
    தீபிகா குமாரி

    டோக்கியோ ஒலிம்பிக் - வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்

    பூடான், அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
    வில்வித்தை போட்டியில் இன்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ரஷ்யாவின் பூடானின் செனியா பெரொவாவை எதிர்கொண்டார்.

    தீபிகா குமாரி முதல் செட்டை 28-25 என கைப்பற்றினார். ஆனால் 2-வதுசெட்டை 26-27 என இழந்தார். 3-வது செட்டை 28-27 எனக் கைப்பற்றினார். 4-வது செட் 26-26 என சமனில் முடிந்தது. 5-வது செட்டை 25-28 என இழந்தார்.

    இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் ஆப் பாயிண்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    ஷூட் ஆப் பாயிண்ட் முறையில் தீபிகா குமாரி 10 புள்ளிகள் பெற்றார். செனியா பெரோவா 7 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் தீபிகா குமாரி 6-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
    Next Story
    ×