search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா
    X
    சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா

    பெண்கள் இரட்டையர் டென்னிஸ் - சானியா மிர்சா ஜோடி தோல்வி

    டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ஜி.சத்யன் 3-4 என்ற கணக்கில் தோற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி உக்ரைனை சேர்ந்த சகோதரிகளான நாடியா- லுட்மைலா ஜோடியை எதிர் கொண்டது.

    இதன் முதல் செட்டை சானியாமிர்சா ஜோடி 6-0 என்ற கணக்கில் எளிதில் வென்றது. இதனால் அடுத்த செட்டையும் வென்று வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

    ஆனால் அதற்கு அடுத்த 2 செட்டிலும் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. உக்ரைன் ஜோடி 0-6, 7-6, (7-0), 10-8 என்ற கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    2 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஒலிம்பிக் போட்டியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

    டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ஜி.சத்யன் இன்று நடந்த 2-வது சுற்றில் ஆங்காங்கை சேர்ந்த லாமை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை இழந்த அவர் அதற்கு அடுத்த 3 செட்களை கைப்பற்றினார்.

    ஆனால் அடுத்து 3 செட்களையும் இழந்து சத்யன் போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 அதாவது 3-4 என்ற கணக்கில் தோற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்.

    வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்ததை சென்னையை சேர்ந்த சத்யன் கோட்டைவிட்டது ஏமாற்றமே.

    Next Story
    ×