என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெண்கள் இரட்டையர் டென்னிஸ் - சானியா மிர்சா ஜோடி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி உக்ரைனை சேர்ந்த சகோதரிகளான நாடியா- லுட்மைலா ஜோடியை எதிர் கொண்டது.
இதன் முதல் செட்டை சானியாமிர்சா ஜோடி 6-0 என்ற கணக்கில் எளிதில் வென்றது. இதனால் அடுத்த செட்டையும் வென்று வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு அடுத்த 2 செட்டிலும் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா ஜோடி தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. உக்ரைன் ஜோடி 0-6, 7-6, (7-0), 10-8 என்ற கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
2 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஒலிம்பிக் போட்டியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.
டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ஜி.சத்யன் இன்று நடந்த 2-வது சுற்றில் ஆங்காங்கை சேர்ந்த லாமை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை இழந்த அவர் அதற்கு அடுத்த 3 செட்களை கைப்பற்றினார்.
ஆனால் அடுத்து 3 செட்களையும் இழந்து சத்யன் போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 அதாவது 3-4 என்ற கணக்கில் தோற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்.
வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்ததை சென்னையை சேர்ந்த சத்யன் கோட்டைவிட்டது ஏமாற்றமே.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்