என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் கிரிக்கெட் - 16 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தியது சேலம்
Byமாலை மலர்24 July 2021 6:03 PM GMT (Updated: 24 July 2021 6:36 PM GMT)
சேலம் அணிக்கு எதிராக திருப்பூர் அணியின் கேப்டன் பிரான்சிஸ் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார்.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பெராரியோ 40 ரன்கள் எடுத்தார். அபிஷேக் 38 ரன்களும் எடுத்தார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். கேப்டன் பிரான்சிஸ் அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், திருப்பூர் அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேலம் அணி சார்பில் பெரியசாமி, முருகன் அஷ்வின், பிரனேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X