search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியை கேப்டன் கோலியுடன் பகிர்ந்துகொள்ளும் இஷாந்த் சர்மா
    X
    விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியை கேப்டன் கோலியுடன் பகிர்ந்துகொள்ளும் இஷாந்த் சர்மா

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் 5ம் நாள் ஆட்டம்... உணவு இடைவேளை வரை நியூசிலாந்து 135/5

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டதால், ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.
    சவுத்தம்டன்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 

    5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி உணவு இடைவேளை வரை, 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, நியூசிலாந்து 82 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியை வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் முகமது ஷமி

    முன்னணி வீரர் ராஸ் டெய்லர் 11 ரன்களிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகளை முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் கைப்பற்றியதால், இந்தியாவின் கை ஓங்கி உள்ளது. கேன் வில்லியம்சன் 19 ரன்களுடனும், கிராண்ட்ஹோம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். 
    Next Story
    ×