search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா, டிரென்ட் போல்ட்
    X
    ரோகித் சர்மா, டிரென்ட் போல்ட்

    ரோகித் சர்மா- டிரென்ட் போல்ட் இடையிலான போட்டியை எதிர்நோக்குகிறேன்: சேவாக்

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி கடந்த இரண்டு வருடங்களில் சிறந்த டெஸ்ட் அணியாக கருதப்படும்.

    இங்கிலாந்து சீதோஷ்ண நிலை நியூசிலாந்துக்கு சற்று கூடுதல் சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவும் கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என சேவாக் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘18-ந்தேதி தொடங்கும் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் நம்பும் ஒரு விசயம், நீங்கள் உங்களுடைய பலத்துடன் விளையாட வேண்டும் என்பதுதான். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் அது சிறந்த விசயமாக இருக்கும். ஏனென்றால், 4-வது மற்றும் 5-வது நாளில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்பத்தக் கூடும் என நம்புகிறேன்.

    இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு நல்லது. அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆல்-ரவுண்டர் திறமை பெற்றவர்கள். இருவரும் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் சேர்ப்பார்கள். இவர்கள் இருவர் இருக்கும்போது, 6-வது பேட்ஸ்மேன் தேவையில்லை.

    சேவாக்

    இந்திய பேட்ஸ்மேன்களுக்கு டிரென்ட் போல்ட்- டிம் சவுத்தி ஜோடி கடுமையான சவால் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருவராலும் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய முடியும். இருவரும் இணைந்து பந்து வீசுவது திறமைமிக்கதாக இருக்கும்.


    ரோகித் சர்மா- டிரென்ட் போல்ட் இடையிலான போட்டியை எதிர்நோக்குகிறேன். ரோகித் சர்மா களத்தில் செட்டாகி நிற்பது, டிரென்ட் போல்டின் முதல் ஸ்பெல்லை ஆஃப் செய்வது பார்ப்பதற்கு விருந்தாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×