என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இந்திய அணியால் டெஸ்ட் போட்டி மீண்டும் புத்துயிர் பெற்று உள்ளது - நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹேட்லி புகழாரம்
லண்டன்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரிச்சர்ட் ஹேட்லி. அந்நாட்டுக்கு பெருமை சேர்த்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து கூறியதாவது:-
இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் வருமானத்தை கொண்டு வருகிறது. இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறு மாதிரி இருக்கும். எனவே கிரிக்கெட்டுக்கு இந்தியா தேவை.
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அற்புதமான பங்களிப்பை அளித்துள்ளது. இந்தியாவால்தான் டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய பயணத்தில் 36 ரன்களுக்கு சுருண்டு பின்னர் அபாரமாக விளையாடிய விதம் அற்புதமானது.
தோல்வியில் இருந்து மீண்டு வந்தார்கள். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது.
அதிகமான இளைஞர்கள் இந்திய அணிக்கு தேர்வாகி நன்றாக விளையாடி வருகிறார்கள். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் உள்ளார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்வது கடினமானது.
இவ்வாறு ரிச்சர்ட் ஹேட்லி கூறி உள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்