என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் சூப்பர் லீக்: லாகூர் அணியில் மீண்டும் இணைந்தார் ரஷித் கான்
Byமாலை மலர்23 May 2021 10:34 AM GMT (Updated: 23 May 2021 10:34 AM GMT)
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டி20 நட்சத்திர வீரர் ரஷித் கான் மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் அணிக்காக விளையாட இருக்கிறார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. கொரோனா தொற்று அதிகரிக்க 14 போட்டிகள் நடைபெற்ற பின், போட்டி ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள போட்டிகளில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 20-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.
லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஆப்கானிஸ்தானின் ரஷித் கானை ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்பின் அவருக்குப் பதிலாக வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசனை ஒப்பந்தம் செய்தது. ஷாகிப் அல் ஹசன் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் ரஷித் கானை லாகூர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ‘‘மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக், லாகூர் அணிக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக லாகூர் அணியுடன் சில சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தினேன். அணியும் நல்ல தொடக்கத்தை பெற்றது. அந்த உத்வேகத்துடன் விளையாடி அணிக்கு உதவுவேன் என்று நம்புகிறேன்’’ என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X