search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    மே 29-ந்தேதி பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டம்: டி20 உலகக்கோப்பை குறித்து ஆலோசனை

    இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து பிசிசிஐ மே 29-ந்தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.
    இந்தியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது 2-வது அலை கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கிறது. இதனால் போட்டியை நடத்த முடியுமா? என்பது தெரியவில்லை.

    ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாவிட்டால், வெளிநாடுகளில் போட்டியை நடத்த முயற்சி மேற்கொள்ளலாம். போட்டியை நடத்த இன்னும் அதிகமான நாட்கள் உள்ளதால், தற்போது இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டியதில்லை.

    இருந்தாலும், வருகிற 29-ந்தேதி பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும். அந்த கூட்டத்தில் டி20 உலகக்கோப்பை குறித்தும் ஆலோசிக்கப்படும்.

    கடுமையான பாதுகாப்பு வளைத்திற்குள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற பொழுதே, வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×