search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பண்ட், சுனில் கவாஸ்கர்
    X
    ரிஷப் பண்ட், சுனில் கவாஸ்கர்

    இந்திய அணியின் எதிர்கால கேப்டன்: ரிஷப் பண்ட்-ஐ பாராட்டும் சுனில் கவாஸ்கர்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணி கேப்டனாக ரிஷப் பண்ட்-ன் செயல்பாடு தன்னை ஈர்க்கும் வகையில் இருந்தது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக இருப்பவர் ஷ்ரேயாஸ் அய்யர். இவர் இங்கிலாந்து தொடரின்போது காயம் அடைந்தார். இதனால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    கேப்டன் பதவியில் ரிஷப் பண்ட் அருமையாக செயல்பட்டார். ஒன்றிரண்டு சிறிய தவறுகள் செய்தாலும், எந்த வகையிலும் கோபம், விரக்தியடையாமல் அணியை வழிநடத்தினார்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களின் ஒருவர் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பண்ட் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘இளம் வீரர் ரிஷப் பண்ட்-ன் தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. ஆறு போட்டிகளில் நீங்கள் ஒன்றை பார்த்திருக்கலாம். அது,... அவரது கேப்டன் பதவியை பற்றி கேட்டதுதான். அதை கேட்டு கேட்டு அவர் சோர்வடைந்திருப்பார். போட்டி முடிந்தபின் பரிசு வழங்கும்போது ஒவ்வொரு போட்டியிலும் அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அவருடைய வழக்கமான ஆட்டத்தை தொடர அனுமதித்தால். கர்ஜிக்கும் சிங்கமாக மாற முடியும். அவர் சில தவறுகள் செய்யலாம். எந்த கேப்டன் செய்யவில்லை?

    ஐபிஎல் போட்டியின் சில ஆட்டங்கள் அவர் கற்றுக்கொள்ளக் கூடிய புத்திசாலி என்பதை காட்டியது. முக்கியமான கட்டத்தில் கூட அவருடைய சொந்த முறையில், இக்கட்டான நிலையை சமாளிக்கும் முடிவை எடுத்தார். அவர் சிறந்த எதிர்கால கேப்டன்களில் ஒருவர். இதில் சந்தேகம் ஏதுமில்லை’’ என்றார்.
    Next Story
    ×