என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை எதிர்கொள்ள 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்த விராட் கோலி தம்பதி
Byமாலை மலர்7 May 2021 10:15 AM GMT (Updated: 7 May 2021 10:15 AM GMT)
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விராட் கோலி தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை உக்கிரமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. 2-வது அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது.
இதனால் மிகப்பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தங்களால் முயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி- பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேலும், ‘Ketto’ நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 7 கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. நன்கொலை அளிக்குமாறு கேட்டுக்கொண்ட கோலி 2 கோடி ரூபாயும் வழங்கியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X