search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்சார் பட்டேல்
    X
    அக்சார் பட்டேல்

    கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அக்சார் பட்டேல் டெல்லி அணியுடன் இணைந்தார்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சார் பட்டேலுக்கு கடந்த 3-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் கடந்த மாதம் 28-ந்தேதி (மார்ச்) மும்பையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை. அதன்பின் 2-வது கட்டமாக கொரோனா டெஸ்ட் எடுக்கும்போது ஏப்ரல் 3-ந்தேதி பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டார்.

    தற்போது அவர் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளார். இதனால் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இருந்தாலும் டெல்லி ஆடும் லெவன் அணியில் இணைவதற்கு கூடுதல் நாட்கள் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் அகமதாபாத் சென்று நான்கு போட்டிகளில் விளையாடும்.
    Next Story
    ×