search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தையா முரளிதரன்
    X
    முத்தையா முரளிதரன்

    இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்

    முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.

    சென்னை:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். 49 வயதான அவர் சுழற்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார்.

    டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

    முரளிதரன் தற்போது ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இருந்து வருகிறார். அவரது மனைவி மதிமலர் சென்னையை சேர்ந்த டாக்டர் ஆவார்.

    இந்தநிலையில் சென்னையில் தங்கி இருந்த முரளிதரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர் நடத்திய பரிசோதனை அடிப்படையில் அவருக்கு இருதய ரத்த நாளத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.

    Next Story
    ×