என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்
சென்னை:
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். 49 வயதான அவர் சுழற்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிறார்.
டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
முரளிதரன் தற்போது ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இருந்து வருகிறார். அவரது மனைவி மதிமலர் சென்னையை சேர்ந்த டாக்டர் ஆவார்.
இந்தநிலையில் சென்னையில் தங்கி இருந்த முரளிதரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர் நடத்திய பரிசோதனை அடிப்படையில் அவருக்கு இருதய ரத்த நாளத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்