என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அக்ஷர் படேல் பந்தில் அவுட்
Byமாலை மலர்4 March 2021 3:58 AM GMT (Updated: 4 March 2021 6:34 AM GMT)
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்திய அணியில் இன்று ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீரர் பும்ரா இடத்தில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார்.
இதேபோல இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் இருந்தது. ஆர்ச்சர், பிராட் ஆகியோருக்கு பதிலாக டான் லாரன்ஸ், டாம்பெஸ் சேர்க்கப்பட்டனர். இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: வீராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே, ரிஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ஜோரூட் (கேப்டன்), டாம் சிப்லி, கிரவுலி, பேர்ஸ்டோவ், பென்ஸ் ஸ்டோக்ஸ், ஆலிவ் போப், பென் போக்ஸ், டான் லாரன்ஸ், டாம் பெஸ், ஜேக் ரீச், ஆண்டர்சன்.
இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். டாம் சிப்லியும், கிரவுலியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
சுழற்பந்து வீரர் அக்ஷர் படேலின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவர் இங்கிலாந்து தொடக்க வீரர்களை எளிதில் சாய்தார். சிபிலி 2 ரன்னில் போல்டு ஆனார். கிரவுலி 9 ரன்னில், முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
7.5 ஓவர்களில் 15 ரன் எடுப்பதற்குள் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ்- ஜோரூட் ஜோடி ஆடி வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்திய அணியில் இன்று ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீரர் பும்ரா இடத்தில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார்.
இதேபோல இங்கிலாந்து அணியில் 2 மாற்றம் இருந்தது. ஆர்ச்சர், பிராட் ஆகியோருக்கு பதிலாக டான் லாரன்ஸ், டாம்பெஸ் சேர்க்கப்பட்டனர். இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: வீராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரகானே, ரிஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ஜோரூட் (கேப்டன்), டாம் சிப்லி, கிரவுலி, பேர்ஸ்டோவ், பென்ஸ் ஸ்டோக்ஸ், ஆலிவ் போப், பென் போக்ஸ், டான் லாரன்ஸ், டாம் பெஸ், ஜேக் ரீச், ஆண்டர்சன்.
இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். டாம் சிப்லியும், கிரவுலியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
சுழற்பந்து வீரர் அக்ஷர் படேலின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவர் இங்கிலாந்து தொடக்க வீரர்களை எளிதில் சாய்தார். சிபிலி 2 ரன்னில் போல்டு ஆனார். கிரவுலி 9 ரன்னில், முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
7.5 ஓவர்களில் 15 ரன் எடுப்பதற்குள் இங்கிலாந்து 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ்- ஜோரூட் ஜோடி ஆடி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X