என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்
Byமாலை மலர்22 Jan 2021 11:46 AM GMT (Updated: 22 Jan 2021 11:46 AM GMT)
ஆஸ்திரேலியா இனிமேல் சிறந்த அணி கிடையாது. இந்தியாவை இந்திய மண்ணில் இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல துடிக்கிறது.
இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது. இந்திய மண்ணில் இங்கிலாந்து தொடரை வெல்ல வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரீம் ஸ்வான் மேலும் கூறுகையில் ‘‘ஆஷஸ் தொடர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் இருந்து நான் விலக வேண்டும். தற்போது இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவதுதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து இந்திய மண்ணில் தொடரை வென்ற பின்னர், தோற்றகடிக்க முடியாத அணியாக உள்ளது. இது ஏன் முக்கிய விஷயம் அல்ல?. விக்கெட் எடுக்கக் கூடிய சுழற்பந்து வீச்சாளரும், சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்ட கெவின் பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேனும் தேவை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X