search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீம் இந்தியா
    X
    டீம் இந்தியா

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.
    இந்திய டெஸ்ட் அணி ஆஸ்ரேலியாவில் விளையாடி வருகிறது. நாளையுடன் டெஸ்ட் போட்டி தொடர் முடிவடைகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 5-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது போட்டியும் சென்னையிலேயே நடக்கிறது.

    சென்னையில் நடைபெற இருக்கும் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. சேத்தன் சர்மா தேர்வுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இந்திய அணி தேர்வு இதுவாகும்.

    இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கேஎல் ராகுல், பும்ரா, அஸ்வின், விஹாரி ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். ஆகையால், இவர்களில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பதே எதிர்பார்ப்பு.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாத இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இடம் பிடிப்பார்கள். ஜடேஜா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என்பதை ஏற்கனவே தெரிவித்துவிட்டனர். இதனால் அஸ்வின் உடன் இணைந்து பந்து வீசும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யார்? என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
    Next Story
    ×