என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்13 Jan 2021 3:00 PM GMT (Updated: 13 Jan 2021 3:00 PM GMT)
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நோவல் மலோசியாவின் செல்வதுரை கிசோனாவை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-15, 21-15 என எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கொரோனா பாசிட்டிவ் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட சாய்னா நேவால், அதன்பிறகு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வர விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் சவுரப் வர்மாவை 21-12, 21-11 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
காஷ்யப் 3-வது சுற்றில் 8-14 என பின்தங்கிய நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் கனடா வீரர் ஜேசன் அந்தோணி ஹோ-ஷுயே 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
காஷ்யப் முதல் சுற்றை 9-21 என இழந்திருந்தார். அதன்பின் 2-வது சுற்றை 21-13 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது சுற்றில் இருந்து வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X