search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 இந்தோனேசிய பேட்மின்டன் வீரர்களுக்கு ஆயுட்கால தடை

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 இந்தோனேசிய பேட்மின்டன் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதித்து உலக பேட்மின்டன் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த 8 பேட்மின்டன் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டி வரை அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதித்து உலக பேட்மின்டன் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பெட்டிங்கில் ஈடுபட்ட மற்ற 5 பேட்மின்டன் வீரர்களுக்கு 6 முதல் 12 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.25 லட்சம் முதல் 8.75 லட்சம் வரை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×