என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிர்கால கேப்டனுக்கு ஸ்மித் மட்டுமே ஆப்சன் கிடையாது: ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு
Byமாலை மலர்22 Dec 2020 10:36 AM GMT (Updated: 22 Dec 2020 10:36 AM GMT)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு ஸ்மித் மட்மே எதிர்கால கேப்டன் என்ற நிலை இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சேர்மன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்ச், டெஸ்ட் அணி கேப்டனாக டிம் பெய்ன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். டெஸ்ட் அணிக்கு ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. டிம் பெய்னும் கேப்டன் பதவி குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்மித் மட்டுமே கேப்டனுக்கான ஆப்சனில் இல்லை என அந்நாட்டு கிரிக்கெட் போர்டின் சேர்மன் எர்ல் எட்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நாங்கள் ஆரோன் பிஞ்ச், டிம் பெய்ன் உள்பட மூன்று சிறந்த கேப்டன்களை பெற்றுள்ளோம். தற்போது சில சிறந்த இளம் வீரர்கள் அணிக்குள் வந்துள்ளனர். ஆகவே, ஸ்மித்துடன் மட்டுமே கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. ஒட்டுமொத்தமாக யார் சிறந்தவர்கள் எனப் பார்கக் வேண்டும்.
அவர் அணிக்கு வரும்போது இளம் வீரராகவும், சிறந்த கேப்டனாகவும் இருந்தார். எந்தவொரு பரிந்துரையையும் கொடுக்கும். நாங்கள் நாங்கள் உட்கார்ந்து அடுத்த கேப்டன் யார்? என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X