search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் தெண்டுல்கர்
    X
    சச்சின் தெண்டுல்கர்

    இது பேட்ஸ்மேன்களை ஆஃப்-சைடு மட்டும் ரன் அடிக்க வேண்டும் என சொல்வதுபோல் உள்ளது- சச்சின்

    பந்து வீச்சாளர்கள் முடக்கப்பட்டவர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என சச்சின் தெண்டுல்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    டி20 கிரிக்கெட் வந்த பிறகு, ரசிகர்களை குசிப்படுத்த வேண்டிய காரணத்தால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நோ-பால் என்றால் ப்ரீ ஹிட், தடினமான பேட் போன்றவைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது.

    இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பேட்டிற்கும் பந்திற்கும் இடையிலான பேலன்சில் குறைபாடு உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த நேரத்தில் கொரோனா முன்னேச்சரிக்கை காரணமாக பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகில் உள்ள பந்து வீச்சாளர்கள் முடக்கப்பட்டவர்களாக உணர்வதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘உமிழ்நீருக்கு மாற்றாக ஏதும் பயன்படுத்த வில்லை இல்லை, பவுலர்கள் ஊனமுற்றவர்கள். தற்போது நான் உமிழ்நீருக்கு மாற்று நம்மிடம் இல்லை. கிரிக்கெட் எப்போதுமே வியர்வை மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றை கொண்டுள்ளதாகும். வியர்வைவிட உமிழ் முக்கியமானது என்று நான் கூறுவேன். பந்து வீச்சாளர்கள் உமிழ்நீரையே விரும்புவார்கள்’’ என்றார்.
    Next Story
    ×