search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீம் இந்தியா
    X
    டீம் இந்தியா

    ஓய்வின்றி அடுத்த வருடம் முழுவதும் கிரிக்கெட் விளையாடும் டீம் இந்தியா

    கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் ஐந்து மாதமாக ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து ஒரு வருடம் ஓய்வில்லாமல் விளையாட இருக்கின்றனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடவில்லை. சுமார் ஆறு மாதம் கழித்து செப்டம்பர் 19-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கியபோதுதான் முதன்முறையாக போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கினர்.

    ஆறு மாதங்களில் நடைபெற இருந்த பெரும்பாலான கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தொடர்கள் அடுத்த வருடம் தொடக்கத்தில் இருந்து நடைபெற உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வருடம் முழுவதும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    தற்போது இந்தியா மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தத் தொடர்கள் ஜனவரியில் முடிவடைகிறது. அதன்பின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து தலா நான்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    ஏப்ரல்-மே-ஜூன் மாதத்தில் ஐபிஎல் தொடர்  நடக்கிறது. அதன்பின் ஜூன் மாதம் இந்தியா இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    ஜூன் - ஜூலையில் ஆசிய கோப்பை டி20 தொடர் நடக்கிறது. இதில் இந்தியா 6 போட்டிகளில் விளையாடும்.

    ஜூலை மாதம் இந்தியா ஜிம்பாப்வே சென்று 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 

    அக்டோபர் மாதம் தென்ஆப்பிரிக்கா இந்தியா வந்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    அக்டோபர்- நவம்பரில் ஐசிசி டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. குறைந்தபட்சம் 6 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

    நவம்பர் - டிசம்பரில் நியூசிலாந்து இந்தியாவில் வந்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டியில் விளையாடுகிறது. 

    டிம்சபர் மாதம் இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
    Next Story
    ×