search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்பராஸ் அகமது
    X
    சர்பராஸ் அகமது

    தகாத வார்த்தை பயன்படுத்திய சர்பராஸ் அகமதுக்கு அபராதம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது போட்டியின்போது தகாத வார்த்தையை பயன்படுத்தியதால் அபராதத்திற்கு உள்ளானார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் உள்ளூர் தொடரான குயைத்-இ-ஆசாம் டிராபி போட்டியில் சிந்து பர்ஸ்ட் லெவன் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

    போட்டியின்போது நடுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து தகாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஆன்-பீல்டு அம்பயர்கள் புகார் ஆளிக்க, போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் சென்டிரல் பஞ்சாப் பேட்ஸ்மேன் உஸ்மான் சலாவதீனுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×