search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோன் பிஞ்ச்
    X
    ஆரோன் பிஞ்ச்

    நான் விரைவாக அவுட்டாகி இருக்கனும்: டி வில்லியர்ஸ் ஆட்டத்தால் மிரண்டு போன பிஞ்ச் சொல்கிறார்

    டி வில்லியர்ஸ்க்கு ஆடுகளம் எளிதானது போன்று தோன்றுகிறது, நான் விரைவாக அவுட்டாகி இருக்கனும் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    ஷார்ஜாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 47 ரன்கள் அடித்தார்.

    டி வில்லியர்ஸ் 33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார். விராட் கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் குவித்தது.

    டி வில்லியர்ஸ் ஆட்டத்தை பார்த்து மிரண்டு போன ஆரோன் பிஞ்ச் ‘‘ஏபி டி வில்லியர்ஸ் ஸ்பெஷல் பேட்ஸ்மேன். இவரை போன்ற பேட்ஸ்மேன்கள் பந்தை விளாசும்போது எதுவே இல்லாமல் எல்லாவற்றையும் செய்ய முடியும். அவர் விளாசும்போது எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும். இந்த ஆடுகளம் விளையாட எளிதானது என்பதுபோல் மாற்றிவிட்டார். ஒரு கட்டத்தில் நாங்கள் 180 ரன்கள் சிறந்த ஸ்கோர் என நினைத்தோம். ஆனால், 194 ரன்கள் குவித்து விட்டோம்’’ என்றார்.
    Next Story
    ×