என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச்சை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நடால்
Byமாலை மலர்11 Oct 2020 4:12 PM GMT (Updated: 11 Oct 2020 4:12 PM GMT)
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ‘களிமண் தரை கதாநாயகன்’ ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்), ஜோகோவிச் மோதினார்.
நடால் வேகத்திற்கு ஜோகோவிச்சால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் முதல் செட்டை நடால் 6-0 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் ஜோகோவிச் துவண்டு போனார். கண் மூடி திறப்பதற்குள் 6-2 என நடால் 2-வது செட்டை கைப்பற்றினார்.
3-வது செட்டில் ஜோகோவிச் சற்று நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் நடால் விடவில்லை. இருவரும் மாறிமாறி கேம்-ஸை வென்றனர். இறுதியில் நடால் 7-5 என 3-வது செட்டை தனதாக்கினார். இதன் மூலம் நடால் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கண்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் நடால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். பிரெஞ்ச் ஓபனில் இதற்கு முன் 7 முறை இருவரும் மோதி உள்ளனர். இதில் நடால் 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X