search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக அரைசதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா சுரேஷ் ரெய்னாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஐ.பி.எல். தொடரில் 5,000 ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 3-வது வீரராக, தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

    மேலும், இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் சாதனைப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்துள்ளார்.

    சுரேஷ் ரெய்னா 38 அரைசதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது ரோகித் சர்மா அவருடன் இணைந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் 44 அரைசதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

    இன்றைய போட்டியில் 45 பந்தில் 70 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×