search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராபின் உத்தப்பா
    X
    ராபின் உத்தப்பா

    பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தய ராபின் உத்தப்பா

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தப்பா தவறுதலாக பயன்படுத்தினார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தினார்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பந்தை பளபளப்பாக எச்சில் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் இரண்டு முறை எச்சரிக்க விடுத்த பின், ஐந்து ரன்கள் அபராதம் வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராபின் உத்தப்பா விதிமுறையை மறந்து தற்செயலாக எச்சில் பயன்படுத்திவிட்டார்.

    இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராபின் உத்தப்பா 7 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
    Next Story
    ×