என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைவரும் ஒன்றிணைந்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும்: மெஸ்சி
Byமாலை மலர்30 Sep 2020 2:58 PM GMT (Updated: 30 Sep 2020 2:58 PM GMT)
பார்சிலோனா அணி உரிமையாளரிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்த மெஸ்சி, தற்போது அணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இளம் வயதிலிருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா பேயர்ன் முனிச் அணக்கெதிராக 2-9 என படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்சி மீது கடும் விமர்சன்ம எழுந்தது. இந்தத் தோல்வியால் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டு புது பயிற்சியாளராக ரொனல்டு கோமென் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இளம் வீரர்களை கொண்டு புதிய அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். இவருக்கும் மெஸ்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட, மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து வெளியேற முடிவு செய்தார். பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால் இந்த வருடம் அணியில் விளையாடுவது என்பது முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் லூயிஸ் சுவாரஸ்-ஐ அட்லடிகோ மாட்ரிட் அணிக்கு கொடுக்க பார்சிலோனா ஒப்பந்தம் செய்தது. இது மெஸ்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பார்சிலோனா உரிமையாளரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் தற்போது அணியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘ஏராளமான விவாதங்களுக்குப் பிறகு, அவற்றை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என கருத வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே திசையில் இழுக்க வேண்டும்.
என்னுடைய தவறுக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் இருந்திருந்தால், அது மட்டுமு பார்சிலோனாவை சிறந்தது, வலிமையாக்கியிருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X