என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேஎல் ராகுல் சதம், ஆர்சிபி-ஐ படுதோல்வி முழுவதற்கும் காரணமான விராட் கோலி
Byமாலை மலர்25 Sep 2020 5:08 AM GMT (Updated: 25 Sep 2020 6:07 AM GMT)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி 97 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைய கேப்டன் விராட் கோலிதான் முழுப்பொறுப்பாகியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 6-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. துபாய் மைதானம் மிகவும் பெரியது. முதலில் பேட்டிங் செய்து 160 ரன்களுக்கு மேல் அடித்தால் சேஸிங் செய்வது கடினம். அப்படி இருந்தும் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆர்சிபி-யின் வீரர்கள் சிறப்பாக பந்து வீச கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழக்காவிடிலும், ரன்கள் அதிக அளவில் அடிக்க இயலவில்லை. கேஎல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார்.
17-வது ஓவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கே.எல். ராகுல் கொடுத்த எளிதான கேட்ச்-ஐ விராட் கோலி பிடிக்க தவறினார். இதனால் கே.எல். ராகுல் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அப்போது ராகுல் 56 பந்தில் 84 ரன்கள் அடித்திருந்தார். பஞ்சாப் அணி 17 ஓவரில் 146 ரன்கள் அடித்திருந்தது.
இந்த கேட்ச்-ஐ பிடித்திருந்தால் பஞ்சாப் அணியை எப்படியும் 170 ரன்னுக்கள் கட்டுப்படித்தியிருக்கும். 18-வது ஓவரை சைனி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்திலும் கேஎல் ராகுல் கொடுத்த எளிதான கேட்ச்-ஐ விராட் கோலி பிடிக்க தவறினார். அப்போது ராகுல் 60 பந்தில் 90 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் 157 ரன்கள் அடித்திருந்தது.
விராட் கோலி இரண்டு வாய்ப்புகள் கொடுத்ததை பயன்படுத்திக் கொண்ட கே.எல். ராகுல் 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி சதம் அடித்தார். அத்துடன் அந்த ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். ஸ்டெயின் 19-வது ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
20-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், கருண் நாயர் ஒரு பவுண்டரியும் விளாசினர். இந்த ஓவரில் 23 ரன்கள் அடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இதனால் 20 ஓவரல் 206 ரன்கள் குவித்தது.
விராட் கோலி முதல் கேட்ச்-ஐ தவறவிட்டபின் கே.எல். ராகுல் 13 பந்தில் 48 ரன்கள் விளாசினார். குறிப்பாக கடைசி 9 பந்தில் 42 ரன்கள் விளாசினார். இதுதான் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
மேலும், பேட்டிங்கில் 1 ரன் எடுத்த நிலையில் அவசரப்பட்டு ஆட்டமிழந்ததும் முக்கிய காரணம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X