என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஓபன் டென்னிஸ்- அரையிறுதியில் செரீனாவுடன் அசரென்கா மோதல்
Byமாலை மலர்10 Sep 2020 5:10 AM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் செரீனாவுடன் அசரென்கா விளையாட உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று மகளிர் ஒற்றைய பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 6 முறை சாம்பியன் பட்டம் பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீராங்கனை ஸ்வெட்டானா பிரான்கோவாவை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 4-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் செரீனா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செரீனா, இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் ஆடியதாகவும் கூறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஷெல்பி ரோஜர்சை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய நவோமி ஒசாகா அரையிறுதியை உறுதி செய்தார். இதேபோல் இன்று நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-1, 6-0 என்ற நேர்செட்களில் எலிஸ் மெர்டன்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், அசரென்கா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று மகளிர் ஒற்றைய பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 6 முறை சாம்பியன் பட்டம் பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீராங்கனை ஸ்வெட்டானா பிரான்கோவாவை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 4-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் செரீனா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செரீனா, இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் ஆடியதாகவும் கூறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஷெல்பி ரோஜர்சை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய நவோமி ஒசாகா அரையிறுதியை உறுதி செய்தார். இதேபோல் இன்று நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-1, 6-0 என்ற நேர்செட்களில் எலிஸ் மெர்டன்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், அசரென்கா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X