என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-1 சமன் செய்தது
Byமாலை மலர்2 Sep 2020 2:14 AM GMT (Updated: 2 Sep 2020 2:14 AM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை 1-1 என சமன் செய்தது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
3-வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பாபர் அசாம் (21), பஹர் ஜமான் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களம் இறங்கிய இளம் வீரர் ஹைதர் அலி 33 பந்தில் 54 ரன்கள் விளாசினார். அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 52 பந்தில் 86 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.
பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டாம் பான்டன் 31 பந்தில் 46 ரன்கள் அடித்தார். மற்றொரு வீரர் பேர்ஸ்டோவ் ரன்ஏதும் அடிக்காமல் டக்வுட் ஆனார். தாவித் மலன் 7 ரன்னிலும், மோர்கன் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மொயீன் அலி அதிரடியாக விளையாட இங்கிலாந்து வெற்றி நோக்கி சென்றது. கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வஹாப் ரியாஸ் வீசினார். முதல் பந்தில் ஜோர்டான் ரன்அவுட் ஆனார்.
5-வது பந்தில் மொயீன் அலி ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 61 ரன்கள் விளாசினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 3 ரன்கள் மட்டுமே இங்கிலாந்தால் அடிக்க முடிந்தது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
கடைசி ஓவரை ஹரிஸ் ரஃப் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ரன்கள் அடிக்கப்பட்டது. 5-வது பந்தை டாம் கர்ரன் சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி பந்தில் கர்ரனால் ரன் அடிக்க முடியவில்லை.
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து 5 ரன்னில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் தொடரை பாகிஸ்தான் 1-1 என சமன் செய்தது. முகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X