என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டுவர விரும்பும் ரெய்னா: அனுமதி கேட்கிறார்
Byமாலை மலர்26 Aug 2020 10:30 AM GMT (Updated: 26 Aug 2020 10:30 AM GMT)
ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர விரும்புகிறேன் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் கடந்த 15-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இவர் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அம்மாநில போலீஸ் டிஜிபி-யிடம் அனுமதி கோரியுள்ளார்.
நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் துறையில் ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன், இதனால் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு செல்ல விரும்புகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களை திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் என்னுடைய நோக்கம். ஏற்கனவே நான் காஷ்மீர் பண்டிட்தான். எனது அப்பா திரிலோக் சந்த் அங்கிருந்து வந்தவர்தான். அம்மா தரம்சாலா மாநிலத்தைச் சேர்ந்தவர்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X