என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்எஸ் டோனியின் விடைபெறுதல் போட்டி எங்கே நடக்கும்?: விவிஎஸ் லக்ஷ்மண் விவரிக்கிறார்
Byமாலை மலர்18 Aug 2020 10:38 AM GMT (Updated: 18 Aug 2020 10:38 AM GMT)
சச்சின் தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வான்கடே மைதானத்தில் முடித்ததுபோல், எம்.எஸ். டோனி சென்னை சேப்பாக்கத்தில் முடிப்பார் என விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு அறிவித்தார். பிசிசிஐ அவருக்கு விடைபெறுதல் போட்டி (Farewell Game) நடத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் பிசிசிஐ-யிடம் கோரிக்கையும் வைக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார். அவரது கடைசி போட்டி எங்கே நடக்கும் என்பதை விவிஎஸ் லக்ஷ்மண் விவரித்துள்ளார்.
எம்எஸ் டோனியின் கடைசி போட்டி குறித்து விவிஎஸ் லக்ஷ்மண் கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி எம்.எஸ் டோனி பேரார்வமாக உள்ளார். இதை நாம் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும். எம்.எஸ். டோனி தலைமையில் மிகவும் வெற்றிகரமான அணியாக அது இருந்து வருகிறது.
அந்த அணி கோப்பையை வெல்ல முடிந்த அளவிற்கு அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்வார். ஆனால் ரசிகர்களைப் பொருத்தவரை, பரவசம் காணப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
தற்போது வரை அவர் கிரிக்கெட் போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். சிஎஸ்கே அணியின் கேப்டன் இருக்கிறார். எம்.எஸ். டோனி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுவார். அவருடைய ஒவ்வொரு நகர்வையும் அவருடைய ரசிகர்கள் ரசிப்பார்கள். கிரிக்கெட் மைதானத்தில் டோனி செலவழிக்கும் தருணத்தை ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடும் கடைசி போட்டியே அவருடைய விடைபெறுதல் போட்டியாகும். சச்சின் தெண்டுல்கர் வான்கடேவில் விடைபெறுதல் போட்டியில் விளையாடினார். அதேபோல் சென்னையில் எம்.எஸ். டோனியின் விடைபெறுதல் போட்டி இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
மைதானத்தில் உள்ள ரசிகர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் டோனியின் கடைசி போட்டி நடைபெறும்போது பார்ப்பார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X