என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபடா
    X
    ரபடா

    மிகப்பெரிய ஓய்வு மகிழ்ச்சிகரமாக இருந்தது: ரபடா சொல்கிறார்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆறுமாத கால ஓய்வு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என ரபடா தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபடா. தென்ஆப்பிரிக்கா கடந்த மார்ச் மாதம் ஒருநாள் கிரிக்கெட் அணி இந்தியா வந்திருந்தபோது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் தொடர் பாதிலேயே நிறுத்தப்பட்டடு தென்ஆப்பிரிக்க வீரர்கள் அவசரமாக சொந்த நாடு திரும்பினர்.

    அதில் இருந்து தற்போது வரை அவர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் ரபடா விளையாட இருக்கிறார்.

    கொரோனா தொற்று காரணமாக கிடைத்த இந்த ஆறு மாத ஓய்வை மிகவும் மிகிழ்ச்சகரமாக அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரபடா கூறுகையில் ‘‘இந்த விடுமுறையை மிகவும் மிகவும் மகிழ்ச்சிகரமாக செலவழித்தேன். ஐந்து வருடம் ஓய்வில்லாமல் விளையாடியதால், வீட்டில் இருப்பதை விரும்பினேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மீண்டும் களம் திரும்ப ஆர்வம் காட்டவில்லை. ஆனால், எப்போதுமே விளையாட்டு வீரராகிய நாம், சிறந்த போட்டியாளர்கள். ஒருமுறை ஆட்டத்திற்கு திரும்பிவிட்டால் வழக்கமாக ஆட்டம் வெளிப்படும்.

    ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக நான் துபாய் செல்ல ஆர்வமாக உள்ளேன். 2014-ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் விளையாட அங்கு சென்றேன். எப்போதுமே மீண்டும் அங்கு செல்ல நான் விரும்புவேன்’’ என்றார்.
    Next Story
    ×