என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓய்வை அறிவித்த அடுத்த நாளில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவித்த சுரேஷ்ரெய்னா
Byமாலை மலர்17 Aug 2020 9:38 PM GMT (Updated: 17 Aug 2020 9:38 PM GMT)
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை சுரேஷ்ரெய்னா அனுப்பி இருக்கிறார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்த சில நிமிடங்களில் அவரது நண்பரும், இடக்கை பேட்ஸ்மேனுமான சுரேஷ்ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.
டோனி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டு தனது ஓய்வு முடிவை பகிரங்கப்படுத்தினார். ஆனால் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ஓய்வு முடிவை வெளியிட்டு இருக்கிறார். ஓய்வை வெளிப்படையாக அறிவித்ததற்கு அடுத்த நாள் தான் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை அனுப்பி இருக்கிறார்.
ஓய்வு அறிவிக்கும் முன்பு வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவிப்பது வழக்கமாகும். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இடக்கை அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஞாயிற்றுக்கிழமை (சனிக்கிழமை ஓய்வு பெற்றார்) இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரபூர்வாக அனுப்பி வைத்தார். அவரது தலைமையில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும், ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்த சில நிமிடங்களில் அவரது நண்பரும், இடக்கை பேட்ஸ்மேனுமான சுரேஷ்ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.
டோனி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டு தனது ஓய்வு முடிவை பகிரங்கப்படுத்தினார். ஆனால் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ஓய்வு முடிவை வெளியிட்டு இருக்கிறார். ஓய்வை வெளிப்படையாக அறிவித்ததற்கு அடுத்த நாள் தான் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை அனுப்பி இருக்கிறார்.
ஓய்வு அறிவிக்கும் முன்பு வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவிப்பது வழக்கமாகும். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இடக்கை அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஞாயிற்றுக்கிழமை (சனிக்கிழமை ஓய்வு பெற்றார்) இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரபூர்வாக அனுப்பி வைத்தார். அவரது தலைமையில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும், ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X