search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரேஷ்ரெய்னா
    X
    சுரேஷ்ரெய்னா

    ஓய்வை அறிவித்த அடுத்த நாளில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவித்த சுரேஷ்ரெய்னா

    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை சுரேஷ்ரெய்னா அனுப்பி இருக்கிறார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்த சில நிமிடங்களில் அவரது நண்பரும், இடக்கை பேட்ஸ்மேனுமான சுரேஷ்ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

    டோனி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டு தனது ஓய்வு முடிவை பகிரங்கப்படுத்தினார். ஆனால் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ஓய்வு முடிவை வெளியிட்டு இருக்கிறார். ஓய்வை வெளிப்படையாக அறிவித்ததற்கு அடுத்த நாள் தான் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை அனுப்பி இருக்கிறார்.

    ஓய்வு அறிவிக்கும் முன்பு வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவிப்பது வழக்கமாகும். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இடக்கை அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஞாயிற்றுக்கிழமை (சனிக்கிழமை ஓய்வு பெற்றார்) இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரபூர்வாக அனுப்பி வைத்தார். அவரது தலைமையில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும், ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×