என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நூலிழையில் வெற்றியை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது: மிஸ்பா உல் ஹக்
Byமாலை மலர்9 Aug 2020 11:10 AM GMT (Updated: 9 Aug 2020 12:37 PM GMT)
இறுதி வரை போராடி வெற்றி பெற முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் விளையாடியது. யாசீர் ஷா 4 விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து 219 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இதனால் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 107 ரன்கள் அதிகம் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 276 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஏழு விக்கெட்டை இழந்து இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
தொடக்கத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இதனால் இங்கிலாந்து அணி 117 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. இதனால் பாகிஸ்தான் வெற்றிபெறும் நிலையில் இருந்தது.
அதன்பின்னர் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 6 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்கள் குவித்து. இது பாகிஸ்தான் வெற்றியை தடுத்தது.
இந்நிலையில் இந்தத் தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிஸ்பா-உல்-ஹக் கூறுகையில் ‘‘ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட் இழந்த பிறகு, இங்கிலாந்தை வெற்றி பெற்றது ஏமற்றம் அளிப்பதாக உள்ளது. பட்லர், கிறிஸ் வோக்ஸ் திறமையான முறையில் எங்களது பந்து வீச்சை அதிரடியாக விளையாடி விட்டார்கள்.
இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கனும். 300 டார்கெட் வைத்திருந்தால் சூழ்நிலை வேறு மாதிரியாக இருந்திருக்கும். சொந்த மண்ணில் தலைசிறந்த பந்து வீச்சை வைத்திருக்கும் இங்கிலாந்துக்கு எதிராக 2-வது இன்னிங்சில் ஓரளவிற்கு போதுமான ரன்கள் அடிப்பது மிகவும் முக்கியமானது.
பட்லர் - கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்வதற்கு முன்பு வரை போட்டி எங்கள் கையில்தான் இருந்தது. அந்த ஜோடி முற்றிலும் சூழ்நிலையை மாற்றி போட்டியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டது. கடும் நெருக்கடியில் சிறப்பான பார்ட்னர்ஷிப்யை உருவாக்கியதுதான் போட்டியின் திருப்புமுனை.
எங்களுக்கு இது கடினமான போட்டி. இதில் இருந்து விரைவில் மீண்டு வருவோம். இதைவிட சிறந்த கிரிக்கெட்டை எங்களால் விளையாட முடியும். தோல்வியில் இருந்து மீளும் திறமை இந்த அணியிடம் உள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X