என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிதி நெருக்கடி என்று கூறமாட்டேன்: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
Byமாலை மலர்9 Aug 2020 10:22 AM GMT (Updated: 9 Aug 2020 10:22 AM GMT)
ஐபிஎல் 2020 சீசன் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியதை நிதி நெருக்கடி என்று கூறமாட்டேன் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் லீக்கின் டைட்டில் ஸ்பான்சராக கடந்த 2018-ல் இருந்து விவோ இருந்து வந்தது. தற்போது சீனா நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளதால் விவோ டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலக நேரிட்டது.
இதனால் பிசிசிஐ-க்கு சுமார் 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நான் நிதி நெருக்கடி என்று கூறமாட்டேன் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘நான் இதை நிதி நெருக்கடி என்று கூற மாட்டேன். இது ஒரு சிறிய குறைபாடு மற்றும் தொழில் ரீதியாக வலுவாக இருப்பதன் மூலம் அதை குறிப்பிட்ட காலத்தில் மீட்டு எடுக்கக்கூடிய வழியை ஏற்பாடு செய்ய வேண்டும்.
பெரிய விசயம் ஒரே நாள் இரவில் வந்து விடாது. அதேபோல் ஒரேநாள் இரவில் பெரிய விசயம் நம்மை விட்டு விலகிச் சென்று விடாது. பிசிசிஐ வலிமையான பவுன்டேசன் கொண்டது. விளையாட்டு, அதிகாரிகள் கடந்தகாலத்தில் மிகவும் வலிமையாக உருவாக்கி வைத்துள்ளார்கள். பிசிசிஐ-யிடம் இந்த சறுக்கலை எதிர்கொள்ளும் திறன் உள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X