என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை ஒத்தி வைத்தது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்4 Aug 2020 8:50 AM GMT (Updated: 4 Aug 2020 8:50 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அக்டோபர் மாதம் நடைபெற இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியா சர்வதேச எல்லையை மூடியுள்ளது. இதனால் அக்டோபர் - நவம்பரில் நடைபெற இருந்த உலக கோப்பை தொடரை நடத்த முடியாது என்று கூறிவிட்டது. இதனால் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை தொடருக்கு வார்ம்-அப் மேட்ச் ஆக வெஸ்ட் இண்டீஸ் உடன் டி20 கிரிக்கெட் தொடரை விளையாட இருந்தது. ஆஸ்திரேலிய அரசைப் பொறுத்த வரைக்கும் டிசம்பர் மாதம் வரை எந்தவித விளையாட்டையும் நடத்த விரும்பவில்லை.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை ஒத்தி வைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் முடிவை வெஸ்ட் இண்டீஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா அக்டோபர் மாதம் ஆஸ்திரேயாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருந்தது. ஐபிஎல் போட்டி நடைபெற இருப்பதால் இந்த தொடரும் ரத்து செய்யப்பட இருக்கிறது.
ஆஸ்திரேலியா செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதுதான் கொரானாவிற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி விளையாடும் முதல் சர்வதேச தொடராகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X