என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர்ச்சியாக 9-வது முறை ‘சீரி ஏ’ கோப்பையை வென்றது யுவென்ட்ஸ்
Byமாலை மலர்27 July 2020 9:48 AM GMT (Updated: 27 July 2020 9:48 AM GMT)
இத்தாலியில் நடைபெற்று வரும் ‘சீரி ஏ’ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இத்தாலி ‘சீரி ஏ’ கால்பந்து லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான யுவென்டஸ் சம்ப்டோரியா அணியை எதிர்கொண்டது. இதில் யுவென்டஸ் 2-0 என வெற்றி பெற்று ‘சீரி ஏ’ கோப்பையை 9-வது முறையாக தொடர்ச்சியாக வென்றுள்ளது.
முதல் 45-வது நிமிடம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. காயத்திற்கான நேரம் வழங்கப்பட்டது. அதன் 7-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். சீரி ஏ-வில் ரொனால்டா 32 போட்டிகளில் 31-வது கோல் அடித்துள்ளார்.
இதனால் யுவென்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் பெடரிகோ ஒரு கோல் அடிக்க 2-0 என யுவென்டஸ் வெற்றி பெற்றது.
இந்த கோப்பையை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்க அர்ப்பணிப்பதாக ரொனால்டோவும், யுவென்டஸ் அணியும் தெரிவித்துள்ளது.
யுவென்டஸ் 36 ஆட்டத்தில் 83 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. இன்டர் மிலன் 36 ஆட்டங்களில் 76 புள்ளிகளும், அட்லாண்டா 36 போட்டிகளில் 75 புள்ளிகள் பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X