என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்பத்துடன் நேரத்தை செலவிட கரீபியன் பிரிமீயர் லீக்கை புறக்கணித்தார் கிறிஸ் கெய்ல்
Byமாலை மலர்25 Jun 2020 11:06 AM GMT (Updated: 25 Jun 2020 11:06 AM GMT)
ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் கரீபியன் பிரிமீயர் லீக்கில் இருந்து சொந்த காரணத்திற்காக விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரிமீயர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இரண்டு முறை தல்லாவஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்துள்ளார்.
2020 சீசனில் செயின்ட் லூசியா ஜவுக்ஸ் அணிக்கு மாறினார். ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 10-ந்தேதி வரை சிபிஎல் நடைபெற இருக்கிறது. ஏப்பர் மாதம் செயின்ட் லூசியா அணி கெய்லை வாங்கியது.
இந்நிலையில் சொந்த காரணமாக இந்த வருட சீசனில் இருந்து கிறிஸ் கெய்ல் விலக முடிவு செய்துள்ளார். கரீபியின் பிரிமீயர் லீக் தொடரின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் ‘‘லாக்டவுன் காரணமாக குடும்பத்தை சந்திக்க முடியாத நிலை உள்ளது. இளைய மகள் செயின்ட் சிட்ஸில் இருக்கிறார். நான் ஜமைக்காவில் இருக்கிறேன். அதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இடைவெளி தேவை’’ எனத் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X