search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாசிம் ஜாபர்
    X
    வாசிம் ஜாபர்

    உத்தரகாண்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வாசிம் ஜாபர் நியமனம்

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து சாதனைப் படைத்த வாசிம் ஜாபர், உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடியவர் வாசிம் ஜாபர். தேசிய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காததால் உள்ளூர் முதல்-தர போட்டிகளில் ஆர்வம் காட்டினார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 42 வயது வரை விளையாடி, இந்த வருட தொடக்கத்தில் ஓய்வு பெற்றார்.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தலைமை பயிற்சியாளராக பணியாற்ற இருக்கும் வாசிம் ஜாபர் இதுகுறித்து கூறுகையில் ‘‘முதல் முறையாக ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளராகி உள்ளேன். இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் எனக்கு இது புதிது. எனது கிரிக்கெட் விளையாட்டிற்குப் பிறகு உடனடியாக இதை எதிர்கொள்ள இருக்கிறேன்.

    உத்தரகாண்ட் புதிய  அணி. அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். 2018-19 சீசனில் விதர்பா அணிக்கெதிராக காலிறுதி ஆட்டத்தில் விளையாடினார்கள். ஆனால், மீண்டும் குரூப் டி-க்கு சென்றுள்ளனர். ஆகவே, இந்த பதவி மிகவும் சவாலானதாக இருக்கும்.

    நான் இந்த பதவியை சாதாரண அணியில் இருந்து தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்’’என்றார்.

    முதலில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்த வாசிம் ஜாபர், கடந்த மூன்று சீசனில் விதர்பா அணிக்காக விளையாடினார். இதில் இரண்டு முறை விதர்பா ரஞ்சி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×