என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆகஸ்ட் - செப்டம்பரில் நடைபெற இருந்த வங்காளதேசம்- நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு
Byமாலை மலர்23 Jun 2020 12:20 PM GMT (Updated: 23 Jun 2020 12:20 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த வங்காளதேசம் - நியூசிலாந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது.
மார்ச் மாதம் தொடக்கத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நான்கு மாத காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இதுவரை இந்தத்தொடர் ஒத்திவைக்கப்படாமல் இருந்தது.
ஆனால் தற்போதுதான் இந்தியா, வங்காளதேசத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும், வங்காளதேச கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொடரை ஒத்திவைப்பதாக இருநாட்டு கிரிக்கெட் போர்டின் ஆட்சிமன்றக் குழுக்களும் முடிவு செய்துள்ளன.
‘‘தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் முழு கிரிக்கெட் தொடரையும் நடத்துவது மிகவும் சவாலானது’’ என்று வங்காளதேசம் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X